Pages

Monday, July 9, 2018

வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்வது எப்படி?



வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்வது எப்படி?

சில அறிவுரைகள்!

1
☸எவ்வளவு நல்லது செய்தாலும் குறை சொல்வதற்கு ஆட்கள் உண்டு. எவ்வளவு குறை சொன்னாலும் நல்லது செய்வதற்கும் ஆட்கள் உண்டு.

☸முதியவர்களை மதித்தால் நாம் ஒழுங்காக வளர்க்கப் பட்டு இருக்கிறோம் என அர்த்தம்.

☸உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால், அது பிறரை தாழ்த்துவதற்கு அல்ல, உயர்த்துவதற்கு உபயோக படுத்துங்கள்.

☸உன்னை அலட்சியப் படுத்துபவரிடம் நீ உரிமையாக பேசாதே. உன்னை புரிந்து உனக்கு உதவி செய்பவருக்கு நீயும் உதவியாக இரு.

☸எந்த  ஒரு விஷயத்தையும், அது எப்படி இருக்கிறதோ, அப்படியே நாம் பார்ப்பதில்லை. நாம் எப்படி இருக்கிறமோ, அப்படிப்  பார்க்கிறோம்.
----------------------------------------------------------
2
*எல்லாம் நன்மைக்கே* வாழ்க்கை வாழ்வதற்கே

🎡சோகம் என்பது கசப்பு மருந்து மாதிரி பட்டுனு மனதிற்குள் முழுங்கிட வேண்டும். சுகம் என்பது ஸ்வீட் மாதிரி பொறுமையா ருசித்து ரசிக்க வேண்டும்.

🎡நம்பினவங்க நம்மை நடுத் தெருவுல நிக்க வைக்கும் போதுதான் தோனும். "இனிமே யாரையும் நம்பக்கூடாது" என்று.

🎡இன்றைக்கு வேண்டுமெனில் நாம் கடினமாக உழைத்தது நமக்கு உதவாமல் நம்மை தோல்வியை சந்திக்க வைக்க நேர்ந்திருக்கலாம். ஆனால் என்றாவது ஒரு நாள் நம்மை வெற்றி பெறச் செய்யும்.

🎡வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமானு தெரியல. ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்குற முடிவு நம்ம வாழ்க்கையையே மாத்தும்.

🎡கஷ்டத்தில் தோளை தட்டிக் கொடுக்க யாரும் இல்லை என்று கவலை கொள்வதை விட, கடந்து செல்லும் போது காலைத் தட்டி விட யாரும் இல்லையென்று நினைத்து சந்தோஷம் கொள்.
-----------------------------------------------------------------------
3
நல்லதே நடக்கும் எல்லாம் நன்மைக்கே

🤢தவறுகளை மன்னித்துப் பழகுங்கள். தவறு செய்தவனுக்கு நன்மையோ இல்லையோ. நமக்கு நல்லது. தலைவலி டென்ஷன் மனச்சோர்வு எதுவும் வராது.

🤢ஒரு செயலை செய்து முடிக்க தேவை புத்தி. அந்த செயல் தேவையானது தானா என்று நிர்ணயிப்பது மனம். இரண்டும் சேர்ந்து செயல் படும் பொழுது நிம்மதி கிடைக்கும்.

🤢கவலை மிகுந்த நினைவுகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். சிலையாக செதுக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அது மிக சுலபம் என்று எண்ணிக் கொள், அது உண்மையிலே சுலபமாகி விடும்.

🤢நாம் வாழும் முறையில் தான் மறைந்திருக்கிறது நமக்கான மரியாதையும் கௌரவமும்.

🤢வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்திக்காதே. உன் பங்களிப்பை மட்டும் செய்து கொண்டிரு.
------------------------------------------------
4

*_எல்லாம் நன்மைக்கே_* வாழ்க்கை வாழ்வதற்கே

*பேசித் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என எதுவும் இல்லை. பேசவே கூடாது என்பது தான் பலருக்கு பிரச்சினை.

❇ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித் தனத்தை 'வீரமென' நினைக்கும் ஆண்களும் திருந்தும் வரை குற் றங்கள் குறையப் போவதில்லை.

❇உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்கள் மனதை வலிமையாக்கும்.

❇உங்களை நீங்கள் முழுவதுமாக நம்பத் துவங்கும் போது உங்களின் வெற்றிப் பயணமும் துவங்கி விடுகிறது.

❇வெளியிலிருந்து எவ்வளவுதான் உத்வேகம் கிடைத்தாலும், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை, இருந்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும்.
---------------------------------------------------------
5
எல்லாம் நன்மைக்கே வாழ்க்கை வாழ்வதற்கே

💥எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை வாழ்வது கஷ்டம் தான். ஆனால் அவ்வாறு வாழ்வதே இனிமையான வாழ்க்கைக்கு வழி.

💥நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தாலே போதும். பிரச்சினைகள் ஏதும் வராது.

💥பொறுமையாக இருங்கள் இன்று கிடைக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும். நாம் செய்யும் நன்மைகளுக்கான பலன்கள்.

💥எந்தவொரு சூழ்நிலையையும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்பவர்கள். வாழ்வில் மிகுந்த பக்குவம் அடைந்தவர்கள்.

💥துன்பத்தில் இருந்து இன்பம், கவலையில் இருந்து மகிழ்ச்சி, ஏழ்மையில் இருந்து செல்வவளம், வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சி வரை, பிறப்பில் இருந்து இறப்பு வரை, ஒவ்வொரு நொடியும் புதிய
பாடத்தை, கற்று கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் வாழ்க்கை.
-------------------------------------------------------------------
6
வாழ்க்கை வாழ்வதற்கே *_எல்லாம் நன்மைக்கே_*

🌰பக்கத்து வீட்டுக் காரர்கள் மீது பொறாமைப் படாமல் வாழ்தலே, நிம்மதியான வாழ்க்கை வாழ வழி.

🌰உண்மையாய் இருப்பதால் தான் அதிகம் காயப் படுகிறோம். நேர்மையாய் இருப்பதால் தான் அதிகம் சோதிக்கப் படுகிறோம். உரிமையாய் இருப்பதால் தான் அதிகம் கோபப் படுகிறோம்.

🌰மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதை விட, வெளிப் படையாகப் பேசி விடுதல் நல்லது.

🌰ஒருவரின் மௌனம் நம்மை பலவாறு சிந்திக்க வைக்கிறது. ஒரு வேளை இதுவாக இருக்குமா. இல்லை அதுவாக இருக்குமா என்று.

🌰நோயால் உடல் நலம் குன்றுவது போல, தீய எண்ணங்களால் மன நலமும் குன்றி விடுகிறது.

🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰
எல்லாம் நன்மைக்கே வாழ்க்கை வாழ்வதற்கே
-------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்

Thursday, June 28, 2018

நீங்களும் உங்கள் கையில் புரளும் பணமும்!



நீங்களும் உங்கள் கையில் புரளும் பணமும்!

*பணம்..*

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம்.

ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?

அப்படியாக  பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.

 "காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1,  TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.

இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான  கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள்.

பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள்,

அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.

இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.

ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.

5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம்
( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.

அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?

6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.

மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான்.

அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள்.

ஆனால் நாம்.....................?

இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.

இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.

ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.

அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்

கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.

இந்த குறுந்தகவலை குறைந்த பட்சம்  நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.

சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!
     
நன்றி.               
இப்படிக்கு:-       
*வங்கி காசாளர்..*
-------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்