கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச
வெட்கமாக இல்லை உங்களுக்கு ?

ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் –
உயர்ஜாதிக்காரர்களின் சதி !
நான் மகாபலி யைப் போன்றவன்.
என் ஆட்சியைக் கவிழ்க்க,
தாழ்ந்த ஜாதிக்காரனான
என்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்க
உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள் என்று
கூசாமல் சொல்லுகிறீர்களே –
வெட்கமாக இல்லை உங்களுக்கு?
50 வருடங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தால்
ஒரு வேளை
மக்கள் நம்பி இருப்பார்கள்.
இன்னமும் இளிச்சவாய் தமிழர்கள் நிறைய பேர்
இருக்கத்தான் செய்கிறார்கள் – என்றாலும்
நீங்கள் நினைக்கின்ற அளவிற்கு அல்ல !
இன்றைய தினம் – சிபிஐ நிறுவனம்,
கைது செய்யப்பட்டுள்ள ராஜாவை
கோர்ட்டில் ஆஜர் செய்யும்போது
கூறியுள்ள காரணங்களில் சில -
ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக்
நிறுவனங்களுக்கு சட்டத்தை, விதிமுறைகளை
மீறி சலுகை கொடுத்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த
முறைதவறிய சலுகைகள்.
அவருக்கு வேண்டப்பட்ட சில நிறுவனங்களுக்கு
சட்ட விதிமுறைகளை மீறியும், வளைத்தும்,
மாற்றியும்
2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கியது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ராஜாவை அவரது
இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி
அரசாங்கம் எடுக்க இருந்த முடிவுகளை முன்கூட்டியே
தெரிந்து கொண்டது.
இரண்டு நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி
உடனடியாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கள்
பாதிப் பங்குகளை மிக அதிக விலைக்கு விற்று
கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்தது.
அப்படிக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை
சென்னையில் ராஜாவின் உறவினர்கள் பெயரில்
நவம்பர் 2008 -ல் புதிதாகத் துவக்கப்பட்ட
கம்பெனிகளுக்கு திருப்பி விட்டு அதன் பயன்
ராஜாவிற்கு கிடைக்கச் செய்தது.
வேண்டுமென்றே தனக்கு வேண்டிய
சில நிறுவனங்களுக்கு மட்டும் லைசென்ஸ்
கிடைக்க விண்ணப்பங்களுக்கான கடைசி
தேதியை மாற்றியது.
இவை எல்லாம்
மகாபலியான கலைஞரிடமிருந்து
ஆட்சியைப் பறிக்க -
பார்ப்பனர்களோ -
உயர் ஜாதிக்காரர்களோ
கூறும் காரணங்கள் அல்ல.
ராஜா மீது வழக்கு ஏன் தொடர வேண்டும் என்று
சிபிஐ, கோர்ட்டில் கூறியுள்ள காரணங்கள்.
இந்த நிலையில்,
என்ன செய்திருக்க வேண்டும் நீங்கள் ?
ஒன்று – ராஜா குற்றமற்றவர் என்று
நீங்கள் கூறுவதை உண்மையாகவே
நீங்களே நம்பினால் –
உங்கள் நெஞ்சில் துணிவிருந்தால் -
அவர் மீது பொய்யான குற்றம் சுமத்தி,
அமைச்சர் பதவியை விட்டு விலக வைத்து,
கைது செய்து,
சிறையில் அடைத்துள்ள
காங்கிரஸ் தலைமையை கண்டித்து,
தைரியமாக அறிக்கை விடுங்கள்.
பொய் வழக்கு போட்ட சிபிஐ யை கண்டித்து
கடுமையாக அறிக்கை விடுங்கள்.
மக்களைத் திரட்டி
போராட்டம் அறிவியுங்கள்.
குற்றமற்ற ராஜாவை அநியாயமாக வதைபட வைக்கும்
சோனியா காந்தியை எதிர்த்து கூட்டணியை
முறித்துக்கொண்டு
மத்திய அரசிலிருந்து வெளியே வாருங்கள்.
18 திமுக எம்பி க்களின் ஆதரவை
விலக்கிக்கொள்ளுங்கள்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின்
மானத்தைக் காக்க,
சுயமரியாதையைக் காக்க -முன்வரும் உங்களை
மக்கள் தலைமேல் தூக்கி
வைத்துக் கொண்டாடுவார்கள்.
இல்லை – ராஜா செய்திருப்பாரா மாட்டாரா
என்பது குறித்து உங்களால் ஒரு தீர்மானத்திற்கும்
வர முடியவில்லை என்றால் –
ராஜாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும்
2ஜி ஊழலுக்கும் திமுக வுக்கும் சம்பந்தமில்லை.
இது கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல.
அவர் அமைச்சராக செயல்பட்ட நிலை குறித்தது.
எனவே -தன் பணியில் ஏற்பட்ட பிரச்சினையில்,
தன்னை நிரபராதி
என்று நிரூபிப்பது அவர் பொறுப்பு.
இந்த வழக்கைச் சந்திக்க அவருக்கு
தேவையான உதவிகளை கட்சி செய்யும் -
என்று சொல்லி விட்டு உங்கள்
கடமையைத் தொடருங்கள்.
இந்த இரண்டில் ஒன்றைச் செய்யாமல்,
பேடித்தனமாக ஜாதியை இங்கு இழுப்பது -
இதில் சம்பந்தப்பட்டிருப்பது ராஜா மட்டுமல்ல.
சிஐடி காலனி வீடும் தான்.
இன்று ராஜா வரை வந்தது, நாளை நம் வீடு வரை
வந்து விடுமோ என்கிற பயம் தான் உங்களை
இப்படி எல்லாம் பேச வைக்கிறது.
டில்லியை முறைத்துக் கொண்டால் இன்னமும்
சிக்கலாகி விடுமோ என்கிற பயம் தான்
இப்படி எல்லாம் பேச வைக்கிறது -
என்றே நினைக்க வைக்கிறது.
இத்தனை வருடங்கள் பொது வாழ்வில் இருந்ததற்கு
ஒரு அர்த்தம் வேண்டும் – நம்மை நம்பி
இந்த உயரத்தில் கொண்டு வைத்துள்ள மக்களுக்கு
நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று
நீங்கள் நினைத்தால் இப்போதாவது நிறுத்துங்கள்
இந்த பசப்பு வார்த்தைகளையும் – போலி
அரசியல் வேடங்களையும்.
வேண்டாம் உங்களுக்கு இனி அரசியல்.
இத்தனை வயதிற்கு
மேலாகவாவது – மக்களிடம் வேடம் போடுவதையும்
வசனம் பேசுவதையும் நிறுத்தி விடலாமே !
பணிவுடன்
ஜெயகுமார் ....
வெட்கமாக இல்லை உங்களுக்கு ?

ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் –
உயர்ஜாதிக்காரர்களின் சதி !
நான் மகாபலி யைப் போன்றவன்.
என் ஆட்சியைக் கவிழ்க்க,
தாழ்ந்த ஜாதிக்காரனான
என்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்க
உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள் என்று
கூசாமல் சொல்லுகிறீர்களே –
வெட்கமாக இல்லை உங்களுக்கு?
50 வருடங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தால்
ஒரு வேளை
மக்கள் நம்பி இருப்பார்கள்.
இன்னமும் இளிச்சவாய் தமிழர்கள் நிறைய பேர்
இருக்கத்தான் செய்கிறார்கள் – என்றாலும்
நீங்கள் நினைக்கின்ற அளவிற்கு அல்ல !
இன்றைய தினம் – சிபிஐ நிறுவனம்,
கைது செய்யப்பட்டுள்ள ராஜாவை
கோர்ட்டில் ஆஜர் செய்யும்போது
கூறியுள்ள காரணங்களில் சில -
ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக்
நிறுவனங்களுக்கு சட்டத்தை, விதிமுறைகளை
மீறி சலுகை கொடுத்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த
முறைதவறிய சலுகைகள்.
அவருக்கு வேண்டப்பட்ட சில நிறுவனங்களுக்கு
சட்ட விதிமுறைகளை மீறியும், வளைத்தும்,
மாற்றியும்
2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கியது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ராஜாவை அவரது
இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி
அரசாங்கம் எடுக்க இருந்த முடிவுகளை முன்கூட்டியே
தெரிந்து கொண்டது.
இரண்டு நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி
உடனடியாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கள்
பாதிப் பங்குகளை மிக அதிக விலைக்கு விற்று
கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்தது.
அப்படிக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை
சென்னையில் ராஜாவின் உறவினர்கள் பெயரில்
நவம்பர் 2008 -ல் புதிதாகத் துவக்கப்பட்ட
கம்பெனிகளுக்கு திருப்பி விட்டு அதன் பயன்
ராஜாவிற்கு கிடைக்கச் செய்தது.
வேண்டுமென்றே தனக்கு வேண்டிய
சில நிறுவனங்களுக்கு மட்டும் லைசென்ஸ்
கிடைக்க விண்ணப்பங்களுக்கான கடைசி
தேதியை மாற்றியது.
இவை எல்லாம்
மகாபலியான கலைஞரிடமிருந்து
ஆட்சியைப் பறிக்க -
பார்ப்பனர்களோ -
உயர் ஜாதிக்காரர்களோ
கூறும் காரணங்கள் அல்ல.
ராஜா மீது வழக்கு ஏன் தொடர வேண்டும் என்று
சிபிஐ, கோர்ட்டில் கூறியுள்ள காரணங்கள்.
இந்த நிலையில்,
என்ன செய்திருக்க வேண்டும் நீங்கள் ?
ஒன்று – ராஜா குற்றமற்றவர் என்று
நீங்கள் கூறுவதை உண்மையாகவே
நீங்களே நம்பினால் –
உங்கள் நெஞ்சில் துணிவிருந்தால் -
அவர் மீது பொய்யான குற்றம் சுமத்தி,
அமைச்சர் பதவியை விட்டு விலக வைத்து,
கைது செய்து,
சிறையில் அடைத்துள்ள
காங்கிரஸ் தலைமையை கண்டித்து,
தைரியமாக அறிக்கை விடுங்கள்.
பொய் வழக்கு போட்ட சிபிஐ யை கண்டித்து
கடுமையாக அறிக்கை விடுங்கள்.
மக்களைத் திரட்டி
போராட்டம் அறிவியுங்கள்.
குற்றமற்ற ராஜாவை அநியாயமாக வதைபட வைக்கும்
சோனியா காந்தியை எதிர்த்து கூட்டணியை
முறித்துக்கொண்டு
மத்திய அரசிலிருந்து வெளியே வாருங்கள்.
18 திமுக எம்பி க்களின் ஆதரவை
விலக்கிக்கொள்ளுங்கள்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின்
மானத்தைக் காக்க,
சுயமரியாதையைக் காக்க -முன்வரும் உங்களை
மக்கள் தலைமேல் தூக்கி
வைத்துக் கொண்டாடுவார்கள்.
இல்லை – ராஜா செய்திருப்பாரா மாட்டாரா
என்பது குறித்து உங்களால் ஒரு தீர்மானத்திற்கும்
வர முடியவில்லை என்றால் –
ராஜாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும்
2ஜி ஊழலுக்கும் திமுக வுக்கும் சம்பந்தமில்லை.
இது கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல.
அவர் அமைச்சராக செயல்பட்ட நிலை குறித்தது.
எனவே -தன் பணியில் ஏற்பட்ட பிரச்சினையில்,
தன்னை நிரபராதி
என்று நிரூபிப்பது அவர் பொறுப்பு.
இந்த வழக்கைச் சந்திக்க அவருக்கு
தேவையான உதவிகளை கட்சி செய்யும் -
என்று சொல்லி விட்டு உங்கள்
கடமையைத் தொடருங்கள்.
இந்த இரண்டில் ஒன்றைச் செய்யாமல்,
பேடித்தனமாக ஜாதியை இங்கு இழுப்பது -
இதில் சம்பந்தப்பட்டிருப்பது ராஜா மட்டுமல்ல.
சிஐடி காலனி வீடும் தான்.
இன்று ராஜா வரை வந்தது, நாளை நம் வீடு வரை
வந்து விடுமோ என்கிற பயம் தான் உங்களை
இப்படி எல்லாம் பேச வைக்கிறது.
டில்லியை முறைத்துக் கொண்டால் இன்னமும்
சிக்கலாகி விடுமோ என்கிற பயம் தான்
இப்படி எல்லாம் பேச வைக்கிறது -
என்றே நினைக்க வைக்கிறது.
இத்தனை வருடங்கள் பொது வாழ்வில் இருந்ததற்கு
ஒரு அர்த்தம் வேண்டும் – நம்மை நம்பி
இந்த உயரத்தில் கொண்டு வைத்துள்ள மக்களுக்கு
நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று
நீங்கள் நினைத்தால் இப்போதாவது நிறுத்துங்கள்
இந்த பசப்பு வார்த்தைகளையும் – போலி
அரசியல் வேடங்களையும்.
வேண்டாம் உங்களுக்கு இனி அரசியல்.
இத்தனை வயதிற்கு
மேலாகவாவது – மக்களிடம் வேடம் போடுவதையும்
வசனம் பேசுவதையும் நிறுத்தி விடலாமே !
பணிவுடன்
ஜெயகுமார் ....