Pages

Monday, July 9, 2018

வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்வது எப்படி?



வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்வது எப்படி?

சில அறிவுரைகள்!

1
☸எவ்வளவு நல்லது செய்தாலும் குறை சொல்வதற்கு ஆட்கள் உண்டு. எவ்வளவு குறை சொன்னாலும் நல்லது செய்வதற்கும் ஆட்கள் உண்டு.

☸முதியவர்களை மதித்தால் நாம் ஒழுங்காக வளர்க்கப் பட்டு இருக்கிறோம் என அர்த்தம்.

☸உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால், அது பிறரை தாழ்த்துவதற்கு அல்ல, உயர்த்துவதற்கு உபயோக படுத்துங்கள்.

☸உன்னை அலட்சியப் படுத்துபவரிடம் நீ உரிமையாக பேசாதே. உன்னை புரிந்து உனக்கு உதவி செய்பவருக்கு நீயும் உதவியாக இரு.

☸எந்த  ஒரு விஷயத்தையும், அது எப்படி இருக்கிறதோ, அப்படியே நாம் பார்ப்பதில்லை. நாம் எப்படி இருக்கிறமோ, அப்படிப்  பார்க்கிறோம்.
----------------------------------------------------------
2
*எல்லாம் நன்மைக்கே* வாழ்க்கை வாழ்வதற்கே

🎡சோகம் என்பது கசப்பு மருந்து மாதிரி பட்டுனு மனதிற்குள் முழுங்கிட வேண்டும். சுகம் என்பது ஸ்வீட் மாதிரி பொறுமையா ருசித்து ரசிக்க வேண்டும்.

🎡நம்பினவங்க நம்மை நடுத் தெருவுல நிக்க வைக்கும் போதுதான் தோனும். "இனிமே யாரையும் நம்பக்கூடாது" என்று.

🎡இன்றைக்கு வேண்டுமெனில் நாம் கடினமாக உழைத்தது நமக்கு உதவாமல் நம்மை தோல்வியை சந்திக்க வைக்க நேர்ந்திருக்கலாம். ஆனால் என்றாவது ஒரு நாள் நம்மை வெற்றி பெறச் செய்யும்.

🎡வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமானு தெரியல. ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்குற முடிவு நம்ம வாழ்க்கையையே மாத்தும்.

🎡கஷ்டத்தில் தோளை தட்டிக் கொடுக்க யாரும் இல்லை என்று கவலை கொள்வதை விட, கடந்து செல்லும் போது காலைத் தட்டி விட யாரும் இல்லையென்று நினைத்து சந்தோஷம் கொள்.
-----------------------------------------------------------------------
3
நல்லதே நடக்கும் எல்லாம் நன்மைக்கே

🤢தவறுகளை மன்னித்துப் பழகுங்கள். தவறு செய்தவனுக்கு நன்மையோ இல்லையோ. நமக்கு நல்லது. தலைவலி டென்ஷன் மனச்சோர்வு எதுவும் வராது.

🤢ஒரு செயலை செய்து முடிக்க தேவை புத்தி. அந்த செயல் தேவையானது தானா என்று நிர்ணயிப்பது மனம். இரண்டும் சேர்ந்து செயல் படும் பொழுது நிம்மதி கிடைக்கும்.

🤢கவலை மிகுந்த நினைவுகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். சிலையாக செதுக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அது மிக சுலபம் என்று எண்ணிக் கொள், அது உண்மையிலே சுலபமாகி விடும்.

🤢நாம் வாழும் முறையில் தான் மறைந்திருக்கிறது நமக்கான மரியாதையும் கௌரவமும்.

🤢வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்திக்காதே. உன் பங்களிப்பை மட்டும் செய்து கொண்டிரு.
------------------------------------------------
4

*_எல்லாம் நன்மைக்கே_* வாழ்க்கை வாழ்வதற்கே

*பேசித் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என எதுவும் இல்லை. பேசவே கூடாது என்பது தான் பலருக்கு பிரச்சினை.

❇ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித் தனத்தை 'வீரமென' நினைக்கும் ஆண்களும் திருந்தும் வரை குற் றங்கள் குறையப் போவதில்லை.

❇உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்கள் மனதை வலிமையாக்கும்.

❇உங்களை நீங்கள் முழுவதுமாக நம்பத் துவங்கும் போது உங்களின் வெற்றிப் பயணமும் துவங்கி விடுகிறது.

❇வெளியிலிருந்து எவ்வளவுதான் உத்வேகம் கிடைத்தாலும், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை, இருந்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும்.
---------------------------------------------------------
5
எல்லாம் நன்மைக்கே வாழ்க்கை வாழ்வதற்கே

💥எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை வாழ்வது கஷ்டம் தான். ஆனால் அவ்வாறு வாழ்வதே இனிமையான வாழ்க்கைக்கு வழி.

💥நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தாலே போதும். பிரச்சினைகள் ஏதும் வராது.

💥பொறுமையாக இருங்கள் இன்று கிடைக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும். நாம் செய்யும் நன்மைகளுக்கான பலன்கள்.

💥எந்தவொரு சூழ்நிலையையும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்பவர்கள். வாழ்வில் மிகுந்த பக்குவம் அடைந்தவர்கள்.

💥துன்பத்தில் இருந்து இன்பம், கவலையில் இருந்து மகிழ்ச்சி, ஏழ்மையில் இருந்து செல்வவளம், வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சி வரை, பிறப்பில் இருந்து இறப்பு வரை, ஒவ்வொரு நொடியும் புதிய
பாடத்தை, கற்று கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் வாழ்க்கை.
-------------------------------------------------------------------
6
வாழ்க்கை வாழ்வதற்கே *_எல்லாம் நன்மைக்கே_*

🌰பக்கத்து வீட்டுக் காரர்கள் மீது பொறாமைப் படாமல் வாழ்தலே, நிம்மதியான வாழ்க்கை வாழ வழி.

🌰உண்மையாய் இருப்பதால் தான் அதிகம் காயப் படுகிறோம். நேர்மையாய் இருப்பதால் தான் அதிகம் சோதிக்கப் படுகிறோம். உரிமையாய் இருப்பதால் தான் அதிகம் கோபப் படுகிறோம்.

🌰மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதை விட, வெளிப் படையாகப் பேசி விடுதல் நல்லது.

🌰ஒருவரின் மௌனம் நம்மை பலவாறு சிந்திக்க வைக்கிறது. ஒரு வேளை இதுவாக இருக்குமா. இல்லை அதுவாக இருக்குமா என்று.

🌰நோயால் உடல் நலம் குன்றுவது போல, தீய எண்ணங்களால் மன நலமும் குன்றி விடுகிறது.

🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰
எல்லாம் நன்மைக்கே வாழ்க்கை வாழ்வதற்கே
-------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்