Pages

Thursday, January 19, 2012

நாமும் அரவணைப்போம்

நாமும் அரவணைப்போம்...



குழந்தை
தொழிலார்களுக்கு
சட்டமுண்டு
இருந்தும்
வேலைக்கு
சேர்ப்பதுக்கண்டு
கோபம் வருவதுண்டு


பிச்சை எடுப்பதை
தடுக்க நினைப்பதுண்டு
இருந்தும்
இப்படி குழந்தைகளை
கண்டால் மனதில்
இரக்கம் கண்டு
கொடுப்பதுமுண்டு


கையேந்தும்
குழந்தைகளுக்கு
அரவணைக்க யாருண்டு...


பிள்ளை இல்லாத
பெற்றோர்களும்,
இவர்களை தத்து எடுக்க
தயங்குவதுண்டு


பெற்ற பெற்றோர்களும்
வயிற்றுக்கு
பிச்ச எடுக்க
பிள்ளைகளை
அனுப்புவதுண்டு


இதை தொழிலாகவே
செய்வதுண்டு
இதற்காக குழந்தைகளை
கடத்தும் கூட்டமுண்டு


எல்லாம் அறிந்தும்
தெரிந்தும்
இவர்களை
அரவணைக்க
யாருண்டு....


பெற்றால் தான்
பிள்ளையா ...
என்ற கேவியோடு
உதவும் கரங்கள்
இருப்பதை போல


நாமும் அரவணைப்போம்
இல்லாமை தடுப்போம்
கல்வியை கொடுப்போம்