Pages

Friday, October 14, 2011

அன்பினை வெளிப்படுத்துவோம் !!!



அன்புள்ளம் கொண்ட நல்ல உள்ளங்களே -

நாம் அனைவரும் இறைவனின் அன்புக் குழந்தைகள்,நமக்கெல்லாம் தாய்தந்தைஉறவினர்கள்நண்பர்கள் என நம்முடைய நலனை கருத்தில் கொள்ளும் ஒரு ஆதரவு குழுவானது உண்டுஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளாலும், சந்தர்ப்பங்களாலும் எந்தவித உதவியும், ஆதரவும் கிடைக்காமல் அனாதைகளாகஉடல் ஊனமுற்றவர்களாகமுதியோர்களாக,நோயாளிகளாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக பலர் நம்நாடு முழுவதும் பரவிக் காணப்படுகிறார்கள்.

ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமலும்உடுத்த உடை கிடைக்காமலும் மருத்துவ உதவி கிடைக்காமலும்அவதிப்படுவோர் ஏராளம் பேர்கள் இங்கு உண்டுஅவர்களை பொறுத்த வரையில் அவர்கள் சந்தோசமாக இருக்கும் ஒருநாள்,வயிறார உண்ணும் ஒரு நாள் உண்டெனில்அந்நாளே அவர்களுக்கு தீபாவளி பண்டிகையாக இருக்கும்.

நாம் அனைவரும் வரும் தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள இருக்கும் இத்தருணத்தில்,த்தகையவர்களையும் கருத்தில் கொண்டு நாம் வாங்கும் போனஸ் தொகையிலோ சம்பளத் தொகையிலோ நம்மால் இயன்றதைக் கொடுப்பதன் மூலம்உதவி செய்வதன் மூலம்அவர்களையும் பண்டிகை கால சந்தோசத்தில் பங்கு பெறச் செய்யலாமே?

உங்களின் ஒவ்வொருவரின் சிறு உதவியாலும்ஒருவரின் ஒருவேளை பசியினை தீர்க்க முடியும்.

இது போன்றவர்களுக்கான ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள், கருணை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவை அனைத்து ஊர்களிலும் உள்ளன.

நம்மில் பலர் கிடைக்கப்போகும் போனஸ் தொகையில் தங்களது நெடுநாளைய கனவுகள், லட்சியங்களை அடைய திட்டங்களை தீட்டி இருக்கலாம், அவ்வாறானவர்கள், உங்களது நண்பர்களுடனோ அல்லது உங்களுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சக தோழர்களுடனோ இணைந்து செயல்படலாம், இதனால் கிடைக்கும் உதவித் தொகையும் அதிகமாக இருக்கும்.

கடவுள் கருணையே வடிவானவர் என்கிறார்கள், உங்களின் கருணையை வெளிப்படுத்துவதன் மூலம் நீங்களும் கடவுளாகலாம்.

சிந்தியுங்கள் செயல்படுங்கள், நன்றி !!!

Diwali Greetings
Deepavali orkut flash scraps, greetings, and glitters

GoodLightscraps.com
நமக்கு தேவை இல்லை எனும் பொருள் ,இன்னொருவருக்கு தேவையானதாக இருக்கும்..ஆதலால் முடிந்த அளவு..நம்மிடம் உள்ள தேவை இல்லாது பொருட்கள் , பழைய துணிகள்,பொருட்கள்.இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.கோவில்களுக்கு ஆயிரம் ஆயிரம் செய்து புண்ணியம் தேடுவதை விட   .பிறந்த நாள்,பண்டிகைகளை அனவாசியமாக செலவழிக்கும் செலவுகளை குறைத்து,முடியாத ஏழைகளுக்கு உதவுங்கள்..அது உங்களை கடவுளிடம் கொண்டு செல்லும்..விவேகவடிவானவர்


அனைவருக்கும் என்னுடைய இனிய தீபத்திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!