Pages

Wednesday, November 14, 2012

Deepavali - little india - Singapore


தீபாவளி - லிட்டில் இந்தியா - சிங்கப்பூர் -புகைப்படங்கள் Deepavali - little india - Singapore)

தீபாவளி - லிட்டில் இந்தியா - சிங்கப்பூர் -புகைப்படங்கள் 
























பிரியமுடன் ..ஜெய குமார்..

Friday, August 10, 2012

TESO மானமுள்ள தமிழன் கவனத்திற்கு


TESO மானமுள்ள தமிழன் கவனத்திற்கு

ஈழ மக்கள் சிங்கள அரசால் பல கொடுமைக்கு ஆளான நேரம் பதுங்கு குழியே வாழ்கை என இருந்த நேரம் ....




தமிழின தலைவன் என சொல்லிகொள்ளும் இவர் அவர்களை காப்பதை விட தன குடும்பத்தை காப்பதிலும் , அமைச்சர் பதவி பெறுவதிலும் ஆர்வமாக இருந்தார்


போரில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த போது தனது குடும்பத்தை சேர்த்து விழா எடுத்து கொண்டாடினார்


தமிழன் குடும்பன் அழியும் போது இவர் குடும்பம் சந்தோஷத்தில் மிதந்தது

மக்கள் மனதை மாற்ற இல்லை இல்லை ஏமாற்ற 15  நிமிடம் உண்ணா விருதம் என்ற நாடகத்தை நடத்தினார்


இவரின் சுயருபம் புரிந்த மக்கள் இவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர் ..
இழந்த செல்வாக்கையும் , வாக்கு வங்கியையும் திரும்ப பெற என்ன செய்வது என யோசித்தார் 



பிரபாகரனின் தாயாரை கூட நாம அனுமதிக்க வில்லையே , மான முல்லா எந்த தமிழன்னும் நம்மை மதிக்க மாட்டானே என நினைத்தார்


அந்த கணத்தில் அவர் சிந்தையில் உதித்ததுதான் டெசோ ... இதைவைத்து மக்களை எளிதில் ஏமாற்றலாம் என முடிவு செய்தார்
போகிற போக்கை பார்த்தால் டெசோ சிறப்பு விருந்தினராக ராஜ பக்ஷே கூட வரலாம் ...


இந்த தமிழ் இன தலைவனை நம்புங்கள் கண்டிப்பா ஈழம் கிடைக்கும் ....( போங்கயா போய் புள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள் )

Wednesday, August 8, 2012

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் - மென்புத்தகம்


வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் - மென்புத்தகம்

ஆனந்த விகடனில் கடந்த 40 வார காலமாக வெளிவந்து அனைவரையும் கவர்ந்த தொடர் கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் என்ற புத்தம் புதிய நூல் உங்களுக்காக . 


வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர்

Friday, April 27, 2012

கலைஞரே இத்தோட நிறுத்திக்கோங்க, பிளீஸ்!!

கலைஞரே இத்தோட நிறுத்திக்கோங்க, பிளீஸ்!!



ஆரம்ப காலங்களில் பதிவுகளில் கலைஞரை கேலி செய்தே அதிக பதிவுகள் எதுதினேன்; சில காலங்களின் பின்னர் அது வேண்டாமென்று தோன்றியதால் நீண்ட நாட்களாக கலைஞர் பற்றி எதுவும் எழுதவில்லை. ஒருவரை திட்டிக்கொண்டே இருப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது என்கின்ற எண்ணம்தான் அதற்கு காரணமன்றி கலைஞர் மீதான எனது எண்ணங்களின் மாற்றமல்ல!! பொதுவாக இலங்கைத் தமிழர்களுக்கு கலைஞர்மீது வெறுப்பும், கோபமும் ஏற்ப்பட காரணம்; அவர் இறுதிநேர யுத்தத்தை நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்ற வழிசெய்யவில்லை என்பதுதான்!! ஆனால் எனக்கு கலைஞர் மீதான வெறுப்புக்கும், ஆத்திரத்திற்கும் அது காரணம் அன்று!!

ஏனெனில் கலைஞரின் கைகளில் அன்று களமுனை மக்களை காப்பாற்றும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது! கலைஞர் மத்தியில் ஆட்சியில் இருந்து விலகிவிடுவேன் என எச்சரித்து, விலகியிருந்தாலும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி; தான் முன்வைத்த காலை பின்வாங்கும் நிலையில் இல்லை என்பது வெட்டவெளிச்சமாக உணரக்கூடிய உண்மை! அந்த விடயம் கலைஞருக்கும் தெரியும், ஜெயலலிதாவிற்கும் நன்கு தெரியும்!! கலைஞர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாததை வைத்து கலைஞரை தமிழினத் துரோகி போலவும், தன்னை ஈழத்து காவலாளி போலவும் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ஒன்றும் ஈழத்துப் பிடிப்பில் அதை செய்யவில்லை என்பதும், அதுவொரு பக்கா அரசியல் என்பதும் சிந்திக்கத் தெரிந்தவர்க்கு தெரிந்த உண்மை!!

அந்தவகையில் எனக்கு கலைஞர் காங்கிரசை விட்டு விலகாததுகூட ஆச்சரியமோ, கோபமோ இல்லை; அவர் தனக்கெதிராக தமிழக எதிர்கட்சிகள் கொண்டு நடாத்தும் தமிழினத் துரோகி பட்டத்தை மறைக்க, தனக்கான இமேஜை நிலை நிறுத்த; தமிழக 'பாமர'மக்களை முட்டாளாக்கத் திட்டமிட்டு நடத்திய உண்ணாவிரத போராட்ட நாடகம்தான் இத்தனைநாள் மாறாத கலைஞர் மீதான கோபத்திற்கு காரணம். அவரது நாடகத்தின் இறுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்ப்பட்டுவிட்டதாக சொல்லிய பொய்களை இப்போது நினைத்தாலும் மனம் குமுறுகின்றது!!! 'யுத்த நிறுத்தம்' நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என இந்திய செய்திகளில் (தமிழக மற்றும் இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளில்) அறிவித்த கணம் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுமே மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்த தருணம் என்று சொல்லலாம்!!!

பசுமரத்து ஆணிபோல அந்த நாட்கள் இன்னமும் என்நினைவில்; கொழும்பில் ஒரு Food City யில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அம்மாவின் தொலைபேசி செய்தி மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது; "கலைஞர் எங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார்" என்பதுதான் அந்த செய்தி. அடுத்த கணமே கொழும்பு, யாழ்ப்பாணம் என தமிழர்கள் வாழும் அத்தனை இடங்களுக்கும் இந்த செய்தி மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. நான் மதியம் சாப்பிட வீட்டிற்கு வருவதற்குள் உண்ணாவிரதம் 'யுத்த நிறுத்தம்' என்னும் சாதகமான தீர்வுடன் நிறைவடைந்திருந்தது; எல்லோருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி; காரணம் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என மிகவும் வேண்டியவர்கள் யுத்த பிரதேசத்தில் மாட்டிக்கொண்டு தத்தளித்த நேரமது!!! அதனால் அனைவருக்கும் தம் உறவுகள் மீண்டு தம் கைகளில் இணைந்ததாக ஒரு பூரிப்பு!

மறுநாளே கலைஞர் செய்தது உண்ணாவிரதம் அல்ல, அதுவொரு பக்கா அரசியல் நாடகம் என அறிந்தபோது ஒடுமொத்த நம்பிக்கைகளும் தூக்குவாரிப் போட்டன!!! கலைஞர் எம்மை செருப்பால் அடித்ததைபோல உணர்ந்தோம். கலைஞர் என்னும் எழுத்தாளர், அரசியத்தலைவர் மீதிருந்த மரியாதை, ஈடுபாடு எல்லாம் அந்த நொடியிலேயே காற்றில் பறந்தது. அதன் பின்னர்கூட மனதில் ஏதோ ஒரு மூலையில் கடைசி நேரங்களிலாவது கலைஞர் ஏதாவது செய்யமாட்டாரா என்கின்ற நம்பிக்கை இருந்துகொண்டே இருந்தது!. 40,000 பொதுமக்களின் உயிரைவிட தனது அரசியல் வாழ்க்கைதான் முக்கியம் என நினைத்த கலைஞரை எப்படி எமக்கு பிடிக்கும்!!!

அந்த தேர்தல் முடிவுகளின் பின்னர் பிள்ளைகளின் அமைச்சர் பதவிகளுக்காக டெல்லிவரை பேச்சுவார்த்தைக்கு சென்ற கலைஞர் அன்று ஈழத்து மக்களுக்காக கடதாசியும், மின்னஞ்சலும் அனுப்பியதோடு நிறுத்தியிருந்தால்க்கூட எமக்கிந்த கோபமும் ஆத்திரமும் இருந்திருக்காது!! அவரது அந்த ஒருசிலமணிநேர உண்ணாவிரத நாடகம்தான் இலங்கை தமிழ் மக்களுக்கு இரத்தம் உறையும் அளவிற்கு கோபத்தையும்,. ஆத்திரத்தையும் தூண்டியது!!! இந்த ஏமாற்றமும், கோபமும், ஆத்திரமும் இறுதி மூச்சிருக்கும்வரை பல இலங்கை தமிழருக்கு தீராத வடுக்கள்!! எதிரியைகூட மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகியை????

இவை நடந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் கலைஞருக்கு என்ன ஆச்சு? தேர்தல் காலம் கூட இல்லை, அப்படி இருந்தும் ஏன் இப்போதெல்லாம் ஈழம், ஈழம் என்று புலம்ப ஆரம்பித்திருக்கின்றார் என்றுதான் புரியவில்லை!! சனல் 4 இன் 'கொலைக்களம்' பார்த்து கண்ணீர் வடித்ததாக இவர் சொல்லியபோது; இவர் மீதிருந்த கோபமும், ஆத்திரமும் பன்மடங்கு ரீசாஜ் செய்யப்பட்டது!!! இப்போதெல்லாம் இலங்கை தமிழர்கள்மீது பரிவு உண்டாகி தனி ஈழம் என்றெல்லாம் பேசுகின்றார்; இதை கேட்கும்போது ஆத்திரம் தவிர்த்து வேறெந்த உணர்வும் ஏற்படவில்லை!! இந்த லட்சணத்தில் இவரது விசிறிகள் இலங்கை தமிழர்கள் ஈழம் அமைவதற்கு கருணாநிதியை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டுமாம்!! இதை கேட்க்கும்போது நகைப்பை தவிர வேறெந்த உணர்வும் தோன்றவில்லை!!


அன்று ஈழத்து பெண்களை சிங்களம் கற்பழித்தது!!
இன்று ஈழத்து எச்சங்களை தமிழக அரசியல் கற்பழிக்கின்றது!!



தமிழகமே !!!

உங்கள் அரசியல் சுயலாபத்துக்கு எதற்கு எங்களது குருதியையும் நின்மதியையும் சுரண்டுகிறீர்கள்! போதும், தயவு செய்து உங்களது ஈழத்து மீதான காதலின் ஒப்பாரியை நிறுத்திவிடுங்கள்!!! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஈழத்து பெயர் சொல்லி வாக்கு பிச்சை கேட்க்கப்போகின்றீர்கள்!! போதும், தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள்!!! கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடித்த பல்ட்டிகள் போல் சர்க்கஸ் குரங்கு கூட இத்தனை தடவை குட்டிக்கரணம் போட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்!! அத்தனை பல்ட்டிகளும் உங்களுக்கு ஒட்டு, எங்களுக்கோ வேட்டு!!! உண்மையில் யாராவது தமிழக தலைமைக்கு எம்மீது அக்கறை இருந்தால் தயவுசெய்து இனிமேலாவது எங்களை வைத்து அரசியல் செய்யாமல் விட்டுவிடுங்கள்!! நீங்கள் காட்டும் குறளி வித்தைகள் எம்மை இன்னமும் காயப்படுத்துகின்றது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்!!

* தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை இலங்கைத் தமிழர்கள் இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியால் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!
எனது ஈழ நண்பனின் மனக்குமுறல்கள்..
*.......*

Sunday, April 22, 2012

20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி


20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி

 



Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



நான் XP இன்ஸ்டால் பண்ண வேண்டுமே என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கலாம். பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க.


  • DVd ஐ உள்ளே போட்டு Install Now, License Terms போன்றவற்றை முடித்து விடுங்கள்.
  • இப்போது கீழே உள்ளது போல வரும்.




  • அடுத்து Drive Selection,Format ஸ்டெப் முடிக்கவும். இப்போது கீழே உள்ளது போல உங்கள் விண்டோவில் வரும்.

  • இப்போது Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.






  • இங்கு மேலே உள்ளது போல "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம்.




  • இப்போது "Install Windows" மீது Right Click செய்து "Go To Process" கிளிக் செய்யவும். இப்போது "Set Up" என்பது தெரிவு ஆகி இருக்கும்.
  • இப்போது "Setup" மீது Right Click செய்து"Set Priority" என்பதில் "Real Time" என்பதை தெரிவு செய்யவும்.
  • இப்போது Task Manager And Command Prompt இரண்டையும் close செய்து விடவும்.

அவ்வளவுதான் நண்பர்களே 20 நிமிடத்தில் உங்கள் வேலை முடிந்து விடும்.


♦இதுவும் என்னுதே♦


Thursday, April 12, 2012

படித்ததில் பிடித்தது

ஒரு சர்வாதிகாரி...



சிரிக்க, சிந்திக்க, அரசியல், நண்பர்கள் படைப்பு, படித்ததில் பிடித்தது

ஒரு சர்வாதிகாரி தன பிறந்த நாளில் தன் படத்தைக் கொண்ட தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார்.ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை.தன செயலரை அழைத்து காரணம் கேட்டார்.செயலர் சொன்னார்,”அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை.அதனால்தான் சரியான விற்பனை இல்லை,” சர்வாதிகாரிக்குக் கோபம் வந்தது. தபால் நிர்வாகியை அழைத்து,” ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே? ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?” என்று கேட்டார். நிர்வாகி சொன்னார்,” கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.”

 

Thursday, March 29, 2012

கடவுள் எங்கே?.....எங்கே??.....[

 கடவுள் எங்கே?.....எங்கே??.....[சிறுகதை]

உலகப் பிரசித்தி பெற்ற அந்தப் பணக்காரக் கடவுளின் கோயிலுக்குத் தன் மனைவி தேவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் செல்வநாயகம்.

அவர் முகத்தில் கனமான சோகத்தின் ஆழமான கீறல்கள்.

அவரின் ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒரேவாரிசு ஆறு வயது அமுதன்.

அவன் மாடிப்படிகளில் உருண்டு மண்டையில் அடிபட்டுக் கோமாவில் விழ, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிறுவனின் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், மனித முயற்சியில் நம்பிக்கை இழந்து வந்த செல்வநாயகத்துக்குக் கடவுளின் நினைப்பு வந்தது.

அவர் அறிந்த கடவுளரின் திருநாமங்களை நாள்தோறும் உச்சரித்தார்..

மனத்தளவில் கடவுளைத் துதித்தால் போதாது என்று அவரின் உள்ளுணர்வு எச்சரித்தது.

தம் மனைவியுடன் மன வேதனையைப் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பொழுதில், அருகிலுள்ள அந்தக் குபேரக் கடவுளைத் தரிசித்து, உண்டியலில் சில லகரங்களைக் காணிக்கையாக்கித் திரும்புவதென முடிவெடுத்தார்.

மனைவியுடன் பயணத்தைத் தொடங்கினார்.

கோயிலை அடைய அரைக் கிலோமீட்டர் இருக்கையில், காரை வழிமறிப்பது போல, கையில் குழந்தையுடன், ஏழ்மைக் கோலத்தில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள்.

காரின் கண்ணாடியைத் திறந்தார் செல்வநாயகம்.

அவர்கள் அவரை நெருங்கி, கைகளை நீட்டியவாறு ஏதோ சொல்ல முற்படுவதற்குள், “ரெண்டு பேரும் நல்லாத்தானே இருக்கீங்க. உழைச்சிப் பிழைக்கலாமே. பிச்சை எடுக்க வெட்கமாயில்லை?” என்று சீற்றம் மிகுந்த குரலில் கேட்டார் செல்வநாயகம்.

அந்த இருவரில், குழந்தையை ஏந்தியிருந்த பெண் பேசினாள்.” சாமி, நாங்க உழைச்சிப் பிழைக்கிறவங்கதான். இப்பத்தான் முதல் தடவையா பிச்சை கேட்கிறோம்” என்றாள்.

அவளைப் புரியாமல் பார்த்தார் செல்வநாயகம். “நீ என்னம்மா சொல்றே?’

“நாங்க எங்க வயித்துப் பாட்டுக்காகப் பிச்சை எடுக்கல, ஐயா.”

“வேறெதுக்குப் பிச்சை எடுக்குறீங்க? மத்த பிச்சைக் காரங்களுக்குப் பிச்சை போடவா?”-விவரிப்புக்கு அடங்காத கொடிய துன்பத்தால் மனம் துவண்டு கிடந்த நிலையிலும் ஒரு வறட்சியான சிரிப்பை வெளிப்படுத்தினார் செல்வநாயகம்.

”சாகக் கிடக்கிற எங்க குழந்தைக்கு வைத்தியம் பார்க்கணும். கையில் காசில்ல. உதவறதுக்கு யாரும் இல்ல. எங்க சொந்த பந்தங்க எல்லாமே எங்களை மாதிரி தினக் கூலிங்க ஐயா.”

”குழந்தைக்கு என்ன தொந்தரவு?”

“இருதயத்தில் ஓட்டை இருக்கு. ஆப்ரேசன் பண்ணலேன்னா சீக்கிரம் செத்துடுவான்னு டாக்டர் சொன்னாருங்க.”

“இன்னும் ஆப்ரேசன் பண்ணலையா?”

“நெறையச் செலவாகுமாம். அன்னாடுங்காச்சி நாங்க. எங்ககிட்ட அவ்வளவு பணம் ஏதுங்க?”

”தர்ம ஆஸ்பத்திரிக்குப் போகலாமே?”

”போனோம். இது மாதிரி ஆப்ரேசன் நிறைய இருக்காம். ஆறுமாசம் கழிச்சி வரச் சொல்லிட்டாங்க. அதுவரைக்கும் எங்க புள்ள உசுரு தங்காது எசமா.”

யோசனையில் ஆழ்ந்திருந்தார் செல்வநாயகம்.

அந்த ஏழைத் தாய் தொடர்ந்தாள்: “கடவுள்தான் எங்க புள்ளையைக் காப்பாத்தணும்னு கோயில் கோயிலா போயிக் கும்பிட்டுத் தவம் கிடந்தோம். மத்த மதச் சாமிங்களையும் மனசில் நினைச்சிக் கண்ணீர் விட்டு அழுதோம். எந்தச் சாமியும் கண் திறக்கல. உழைச்சிப் பிழைக்கிற நாங்க யாருக்கும் கெடுதல் செஞ்சதில்ல. கடவுள் எங்களை ஏன் சோதிக்கிறார்னு தெரியல.....”

அவள் தேம்பி அழ ஆரம்பித்ததால் அவளுக்கு நா குழறியது.

“அழாம சொல்லு” என்றார் செல்வநாயகம்.

”எங்க செல்லம் அணுஅணுவா சாகிறதைக் கண்ணால பார்க்க முடியல ஐயா. பிச்சை எடுத்தாவது பிள்ளையைக் காப்பாத்தணும்னு நினைச்சித்தான் முதல்
தடவையா உங்ககிட்ட கை ஏந்தினோம். நீங்க நல்லா இருக்கணும். அம்பதோ நூறோ நீங்க இஷ்டப்பட்டதைக் குடுத்து உதவுங்க சாமி’

சற்றே தயக்கத்துடன் கேட்டார் செல்வநாயகம்: “உங்களை நம்பலாமா?”

குழந்தையின் அப்பன் தன் வசமிருந்த ஒரு பையிலிருந்து, மருத்துவமனை தந்த மருத்துவ அறிக்கையைப் பவ்வியமாய் நீட்டினான்.

அதை ஆராய்ந்த செல்வநாயகத்தின் முகத்தில் திருப்தி பரவியது.

“காரில் உட்காருங்க. உங்க குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துடறேன். ஆகிற செலவை நான் ஏத்துக்கிறேன்.” என்றார்.

தயங்கிய அந்தப் பரம ஏழைத் தம்பதியை வற்புறுத்திக் காரில் ஏற்றி கொண்டார்.

ஓட்டுனரிடம் காரைத் திருப்பச் சொன்னார்.

“ஏங்க, கோயிலுக்கு.....”-சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிக்காமல் நிறுத்தினார் அவர் மனைவி தேவி

"ஏழைகளுக்கு உதவாத கடவுள் பணக்காரங்களான நமக்கு நிச்சயம் உதவப் போறதில்ல. கடவுளுக்கு லஞ்சமா உண்டியலில் போடுற பணத்தை ஏழைகளுக்குத் தானமா கொடுத்தா அவங்க சந்தோசப்படுவாங்க. அந்தச் சந்தோசம் நம் வருத்தத்தைக் குறைக்கும் தேவி."
*********************************************************************************

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்................


ஒரு விவசாயின் பண்ணையில் இருந்த குதிரை ஒடிப் போய்விட்டது. அதனைக் கேட்ட பக்கத்தில் இருந்தவர்கள் அந்த விவசாயிடம் சென்று தனது வருத்தத்தினை தெரிவித்தனர். அதற்கு விவசாயி "இதனை நான் துரதிருஷ்டமாக கருதவில்லை" என்று பதிலுரைத்தார். அந்த ஊர் மக்கள் தலையை ஆட்டிக் கொண்டே அங்கிருந்து அகன்றனர்.

அடுத்த நாள் விவசாயின் குதிரை மற்ற மூன்று காட்டு குதிரைகளுடன் வீட்டிற்கு வந்தது. ஊர் மக்கள் அதனைக் கண்டு வியப்படைந்து விவசாயிடம் மகிழ்ச்சியுடன் உனக்கு அதிர்ஷ்டம் வந்து உள்ளது எனப் பாராட்டினர். அதற்கு விவசாயி மெதுவாக "இதனை அதிர்ஷ்டமாக கருதவில்லை" என்று அவர்களைப் பார்த்து கூறினார். இதனைக் கேட்ட மக்கள் முன்பைவிட குழப்பமாக அங்கிருந்து கிளம்பினர்.

அந்த வாரத்தின் கடைசியில் விவசாயின் மகன் புதுக் குதிரையை பழக்குவதற்காக சென்ற போது கால் உடைந்து வீட்டிற்கு வந்தான். ஊர் மக்கள் விவசாயியைப் பார்த்து தங்கள் வருத்தத்தினை தெரிவித்தனர். விவசாயி முன்பை போலவே "இதனை துயரமாக கருதவில்லை" என்று கூறினார். மக்கள் விவசாயிற்கு என்ன ஆயிற்று தனது மகன் கால் உடைந்ததை கூட துயரமாக கருதவில்லை என்று கூறியவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடுத்த நாள் நாட்டின் மன்னர் அந்த ஊரிலிருந்த வாலிபர்களை தனது இராணுவத்தில் சேர்ப்பதற்காக வந்தார். விவசாயின் மகன் கால் உடைந்து இருந்ததால் அவனை இராணுவத்தில் எடுத்துக் கொள்ள வில்லை.

Thursday, March 22, 2012

மனம் கவர்ந்த பாடல்கள்

என்னதான் இப்பவர  பாட்டு கேட்டாலும்..ராஜா இசை என்றாலே சுகம்தான்


மனம் கவர்ந்த பாடல்கள்
சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.
நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!
ராகதேவன் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை இனிமையில் நான் ரசிக்கும் மற்றுமொரு பாடல்


ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!
இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.
அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.
தொடர்ந்து வரும் பல்லவி,
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…
அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்
ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.
இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…
என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, …, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.
பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி
பாடலை எழுதியவர்: வைரமுத்து


சலங்கை ஒலியில் ராஜா இசை மனதை மயக்கும்....ராஜா இசை என்றாலே சுகம்தான் 



இசையுடன்
J.குமார் .

Friday, March 16, 2012

ஈழத்தமிழனின் ஈடுகட்ட முடியாத இழப்பு


ஈழத்தமிழனின் ஈடுகட்ட முடியாத இழப்புக்கு நீதி கேட்டு வெடித்திருக்கும் ட்விட்டர் புரட்சி


ஈழமக்களுக்கு இழைக்கப்பட கொடுமைகள் உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க வேண்டும், அனைவருக்கும் அந்த கொடுமைகள் பற்றி அறியச்செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ட்விட்டரில் புரட்சி கோஷங்கள் எழுப்பப்படது.. என் அளவில் நான் எழுதியவை..

1.ஆங்கிலேயன் இந்தியாவை கொள்ளை அடித்தான், ஒரே ஒரு இத்தாலிப்பெண் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே பலி ஆக்கினாள் #killingfields"

2. தமிழனை காட்டி கொடுக்கத்தயங்காதவன் கருணா,தமிழன் வெட்டி எரியப்பட்டபோதும் வேடிக்கை பார்த்தவர் கலைஞர் #killingfields"

3. திமுக கொடியின் நிறத்துக்கான விளக்கம்- ஈழத்தமிழனின் ரத்தமும்,அவன் எதிர்காலமுமா?-சிவப்பு,கறுப்பு #killingfields

4. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவர் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, எல்லாரையும் ஒரு வருடம் இலங்கையில் தங்கவைத்தால் என்ன?#killingfields"

5. சாப்பாட்டில் கை வைக்கும்போது இலங்கையில் ஓடிய ரத்த ஆறுதான் நினைவு வருகிறது, கை கழுவினால் அவர்கள் கண்ணீர் நினைவு#killingfields

6. தமிழ் நாட்டை பீடித்த ரோகி, தமிழ் இனத்தை ஆண்ட துரோகி, அவர் கலைஞரா? கொலைஞரா.?#Killingfields

7. தமிழ் இனத்தலைவர் என்றழைக்கப்பட்டவர் தமிழ் இனத்தை அழிக்கத்துணை போன தலைவர் என்று வரலாறு அழைக்கட்டும்#Killingfields

8. இந்தியா நான்கு எழுத்து,தமிழன் நான்கு எழுத்து,இலங்கை நான்கு எழுத்து,கலைஞர் நான்கு எழுத்து துரோகம் நான்கு எழுத்து#KillingFields

9. உயிரைக்கொடுத்து இன மானம் காக்க பலர்.. மானத்தைக்கெடுத்து,அடுத்துக்கெடுத்து பதவியைத்தக்கவைக்க சிலர்#Killingfields

10. இந்தியப்பெருங்கடல் நீர் மட்டம் உயர்ந்தால் அது ஈழத்தமிழர்களின் நிலை கண்ட நம் கண்ணீராய் இருக்கும்#Killingfields

11. அரசியல் லாபத்துக்காக ஒரு இனத்தையே பலியிடத்துணிந்த இரு குடும்பங்களும் மன உறுத்தல்களுடனே எஞ்சிவாழ்நாளை கழிக்கட்டும்#Killingfields

12. கடவுள் அரக்கனை கொன்ற நிகழ்வு சூரசம்ஹாரம், ஒரு அரக்கன் பல வீரர்களை சூழ்ச்சி செய்து தின்ற நிகழ்வு வீர சம்ஹாரம்#killingfields

13. இலங்கையில் ராகுலையும், கூடங்குளத்தில் பிரியங்காவையும் நிரந்தரக்குடி வைத்து விட வேண்டும்#KillingFields

14. அகதிகளின் கதி அதோ கதி, அனைத்தும் அரசியல் சதி, தமிழனின் நெற்றியில் பலவந்தமாக எழுதப்பட்ட விதி#KillingFields

------------------------------

15. கையில் இருப்பதை எல்லாம் கொடுத்தான் கர்ணன், கைக்கு அகப்பட்டவர்களை எல்லாம் கொன்றான் கர்ண கொடூரன் ராஜபக்சே#KillingFields

16. தமிழ்நாட்டைவிட்டு கலைஞர் , இந்தியாவை விட்டு சோனியா காந்தி 2 குடும்பமும் தள்ளி வைக்கப்பட்டால் நாடு சுபிட்சம் பெறும்#KillingFields

17. ஒரு ஊர் வாழ ஒரு குடும்பத்தை இழக்கலாம், ஆனால் ஒரு குடும்பம் வாழ ஒரு இனத்தையே அழிக்க வழி செய்தார் கலைஞர்#KillingFields

18. இத்தாலி தன் ஒரு தாலி இழந்ததற்கு ஒரு லட்சம் தாலிகளை பலி கொடுத்தது, பழி தீர்த்தது##KillingFields

19. ஒரு இந்தியன் இத்தாலிக்கு வாழ்வு கொடுத்தான், பல தமிழர்களின் வாழ்வு கெடுத்தான்#KillingFields

----------------------------------
20. காந்தியின் பெயரை தன் பெயருடன் கொண்டிருந்தும் அவர் குணங்கள் எதுவுமே வரப்பெறவில்லை எனில் எதற்கு அந்த பதவி?#KillingFields
-------------------------------
21. இரண்டு தனி நபர்கள் நினைத்திருந்தால் ஒரு இனமே அழிக்கப்படாமல் இருந்திருக்கும்#KillingFields

-----------------------------------

22. நம்மிடம் கொடுப்பதற்கு, காப்பதற்கு மனம் இல்லை, அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை#KillingFields

23. எட்டு மணி நேர மின்வெட்டையே தாங்கிக்கொள்ள முடியாதவன் தமிழகத்தமிழன், 24 மணிநேரமும் மனித வெட்டை சந்திப்பவன் ஈழத்தமிழன்#KILLINGFIELDS

24 இல்பொருள் உவமை அணிக்கு மிகக்கொடூரமான உதாரணம்கருணையே இல்லாத துரோகி கருணா#Killingfields

25. ஈழத்தமிழனின் வீட்டில் அரிசி உலை கொதிப்பதில்லை,எந்த சிங்களனும் அவர்களை மதிப்பதில்லை#KillingFields
---------------------------------
26. அமைதிக்கான நோபல் பரிசை தருவதற்கு முன் அட்டூழியத்துக்கான அகோர தண்டனை ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட வேண்டும்#KillingFields
------------------------

27. இறந்தான் இறந்தான் ஈழத்தமிழன் இறந்தான், மறந்தான் மறந்தான் தமிழகத்தலைவன் தாய் நாட்டை நேசிக்க, காப்பாற்ற மறந்தான்#KillingFields

28. ஈழத்தில் பிறந்து ஈழத்தில் அழிந்த பிரம்மபுத்திரர்கள்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் பிரம்மபுத்ரா நதியே வற்றிவிட்டதாம்#KillingFields
----------------------------------

29. வெண்ணைகள் எல்லாம் அன்னைகள் ஆகின்றனர்,தலை எடுக்க விடாமல் துரத்தப்பட வேண்டியவர்கள் தலைவராக இருக்கிறார்கள்#KillingFields

--------------------------------

30. உயிருடன் ஈழத்தமிழனை எரித்த ராஜபக்சேவுக்கு விருந்து வை, கண்டனம் தெரிவிக்க உருவ பொம்மை எரித்தால் சிறையில் வை #KillingFields

----------------------------------


31. ஈழத்தமிழனுக்காக போராடிய புலிகளை அரசியல் லாபத்துக்காக வஞ்சித்தன தமிழக நரிகள் #killingfields
------------------------------

32. கடல் கடந்து ஈழத்தில் தமிழன் மண்டையைப்போட்டுக்கொண்டிருக்கிறான்.இங்கே நாம் கடலை போட்டுக்கிட்டு இருக்கோம் :( #killingfields
--------------------------------------

33. ! தமிழர்களே! நீங்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன், எனக்கு என் குடும்பம் தான் பெருசு #KillingFields

34. ஈழத்தில் சாதம் வடிக்க வழி இல்லாமல் தமிழன், இங்கே சச்சின் சதம் அடித்தால் என்ன? அடிக்கா விட்டால் என்ன? #killingfields
---------------------------
35. எந்த குடுகுடுப்பைக்காரராலும் நம் நாட்டுக்கு நல்ல காலம் எப்போ பிறக்கும்னு சொல்லவே முடியலை :( #killingfields
------------------------------
36. தமிழக அரசியல் தலைவர்களில் முதல்வராக இருந்தவர்களில் எம் ஜி ஆர் மட்டுமே ஈழத்தமிழனுக்கு ஏதாவது செய்ய நினைத்தவர் #killingfields””

'தெய்வம் நின்று கொல்லும்’ என்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர தமிழனுக்கு வேறு வழி இல்லை!