Pages

Thursday, March 29, 2012

கடவுள் எங்கே?.....எங்கே??.....[

 கடவுள் எங்கே?.....எங்கே??.....[சிறுகதை]

உலகப் பிரசித்தி பெற்ற அந்தப் பணக்காரக் கடவுளின் கோயிலுக்குத் தன் மனைவி தேவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் செல்வநாயகம்.

அவர் முகத்தில் கனமான சோகத்தின் ஆழமான கீறல்கள்.

அவரின் ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒரேவாரிசு ஆறு வயது அமுதன்.

அவன் மாடிப்படிகளில் உருண்டு மண்டையில் அடிபட்டுக் கோமாவில் விழ, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிறுவனின் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், மனித முயற்சியில் நம்பிக்கை இழந்து வந்த செல்வநாயகத்துக்குக் கடவுளின் நினைப்பு வந்தது.

அவர் அறிந்த கடவுளரின் திருநாமங்களை நாள்தோறும் உச்சரித்தார்..

மனத்தளவில் கடவுளைத் துதித்தால் போதாது என்று அவரின் உள்ளுணர்வு எச்சரித்தது.

தம் மனைவியுடன் மன வேதனையைப் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பொழுதில், அருகிலுள்ள அந்தக் குபேரக் கடவுளைத் தரிசித்து, உண்டியலில் சில லகரங்களைக் காணிக்கையாக்கித் திரும்புவதென முடிவெடுத்தார்.

மனைவியுடன் பயணத்தைத் தொடங்கினார்.

கோயிலை அடைய அரைக் கிலோமீட்டர் இருக்கையில், காரை வழிமறிப்பது போல, கையில் குழந்தையுடன், ஏழ்மைக் கோலத்தில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள்.

காரின் கண்ணாடியைத் திறந்தார் செல்வநாயகம்.

அவர்கள் அவரை நெருங்கி, கைகளை நீட்டியவாறு ஏதோ சொல்ல முற்படுவதற்குள், “ரெண்டு பேரும் நல்லாத்தானே இருக்கீங்க. உழைச்சிப் பிழைக்கலாமே. பிச்சை எடுக்க வெட்கமாயில்லை?” என்று சீற்றம் மிகுந்த குரலில் கேட்டார் செல்வநாயகம்.

அந்த இருவரில், குழந்தையை ஏந்தியிருந்த பெண் பேசினாள்.” சாமி, நாங்க உழைச்சிப் பிழைக்கிறவங்கதான். இப்பத்தான் முதல் தடவையா பிச்சை கேட்கிறோம்” என்றாள்.

அவளைப் புரியாமல் பார்த்தார் செல்வநாயகம். “நீ என்னம்மா சொல்றே?’

“நாங்க எங்க வயித்துப் பாட்டுக்காகப் பிச்சை எடுக்கல, ஐயா.”

“வேறெதுக்குப் பிச்சை எடுக்குறீங்க? மத்த பிச்சைக் காரங்களுக்குப் பிச்சை போடவா?”-விவரிப்புக்கு அடங்காத கொடிய துன்பத்தால் மனம் துவண்டு கிடந்த நிலையிலும் ஒரு வறட்சியான சிரிப்பை வெளிப்படுத்தினார் செல்வநாயகம்.

”சாகக் கிடக்கிற எங்க குழந்தைக்கு வைத்தியம் பார்க்கணும். கையில் காசில்ல. உதவறதுக்கு யாரும் இல்ல. எங்க சொந்த பந்தங்க எல்லாமே எங்களை மாதிரி தினக் கூலிங்க ஐயா.”

”குழந்தைக்கு என்ன தொந்தரவு?”

“இருதயத்தில் ஓட்டை இருக்கு. ஆப்ரேசன் பண்ணலேன்னா சீக்கிரம் செத்துடுவான்னு டாக்டர் சொன்னாருங்க.”

“இன்னும் ஆப்ரேசன் பண்ணலையா?”

“நெறையச் செலவாகுமாம். அன்னாடுங்காச்சி நாங்க. எங்ககிட்ட அவ்வளவு பணம் ஏதுங்க?”

”தர்ம ஆஸ்பத்திரிக்குப் போகலாமே?”

”போனோம். இது மாதிரி ஆப்ரேசன் நிறைய இருக்காம். ஆறுமாசம் கழிச்சி வரச் சொல்லிட்டாங்க. அதுவரைக்கும் எங்க புள்ள உசுரு தங்காது எசமா.”

யோசனையில் ஆழ்ந்திருந்தார் செல்வநாயகம்.

அந்த ஏழைத் தாய் தொடர்ந்தாள்: “கடவுள்தான் எங்க புள்ளையைக் காப்பாத்தணும்னு கோயில் கோயிலா போயிக் கும்பிட்டுத் தவம் கிடந்தோம். மத்த மதச் சாமிங்களையும் மனசில் நினைச்சிக் கண்ணீர் விட்டு அழுதோம். எந்தச் சாமியும் கண் திறக்கல. உழைச்சிப் பிழைக்கிற நாங்க யாருக்கும் கெடுதல் செஞ்சதில்ல. கடவுள் எங்களை ஏன் சோதிக்கிறார்னு தெரியல.....”

அவள் தேம்பி அழ ஆரம்பித்ததால் அவளுக்கு நா குழறியது.

“அழாம சொல்லு” என்றார் செல்வநாயகம்.

”எங்க செல்லம் அணுஅணுவா சாகிறதைக் கண்ணால பார்க்க முடியல ஐயா. பிச்சை எடுத்தாவது பிள்ளையைக் காப்பாத்தணும்னு நினைச்சித்தான் முதல்
தடவையா உங்ககிட்ட கை ஏந்தினோம். நீங்க நல்லா இருக்கணும். அம்பதோ நூறோ நீங்க இஷ்டப்பட்டதைக் குடுத்து உதவுங்க சாமி’

சற்றே தயக்கத்துடன் கேட்டார் செல்வநாயகம்: “உங்களை நம்பலாமா?”

குழந்தையின் அப்பன் தன் வசமிருந்த ஒரு பையிலிருந்து, மருத்துவமனை தந்த மருத்துவ அறிக்கையைப் பவ்வியமாய் நீட்டினான்.

அதை ஆராய்ந்த செல்வநாயகத்தின் முகத்தில் திருப்தி பரவியது.

“காரில் உட்காருங்க. உங்க குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துடறேன். ஆகிற செலவை நான் ஏத்துக்கிறேன்.” என்றார்.

தயங்கிய அந்தப் பரம ஏழைத் தம்பதியை வற்புறுத்திக் காரில் ஏற்றி கொண்டார்.

ஓட்டுனரிடம் காரைத் திருப்பச் சொன்னார்.

“ஏங்க, கோயிலுக்கு.....”-சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிக்காமல் நிறுத்தினார் அவர் மனைவி தேவி

"ஏழைகளுக்கு உதவாத கடவுள் பணக்காரங்களான நமக்கு நிச்சயம் உதவப் போறதில்ல. கடவுளுக்கு லஞ்சமா உண்டியலில் போடுற பணத்தை ஏழைகளுக்குத் தானமா கொடுத்தா அவங்க சந்தோசப்படுவாங்க. அந்தச் சந்தோசம் நம் வருத்தத்தைக் குறைக்கும் தேவி."
*********************************************************************************

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்................


ஒரு விவசாயின் பண்ணையில் இருந்த குதிரை ஒடிப் போய்விட்டது. அதனைக் கேட்ட பக்கத்தில் இருந்தவர்கள் அந்த விவசாயிடம் சென்று தனது வருத்தத்தினை தெரிவித்தனர். அதற்கு விவசாயி "இதனை நான் துரதிருஷ்டமாக கருதவில்லை" என்று பதிலுரைத்தார். அந்த ஊர் மக்கள் தலையை ஆட்டிக் கொண்டே அங்கிருந்து அகன்றனர்.

அடுத்த நாள் விவசாயின் குதிரை மற்ற மூன்று காட்டு குதிரைகளுடன் வீட்டிற்கு வந்தது. ஊர் மக்கள் அதனைக் கண்டு வியப்படைந்து விவசாயிடம் மகிழ்ச்சியுடன் உனக்கு அதிர்ஷ்டம் வந்து உள்ளது எனப் பாராட்டினர். அதற்கு விவசாயி மெதுவாக "இதனை அதிர்ஷ்டமாக கருதவில்லை" என்று அவர்களைப் பார்த்து கூறினார். இதனைக் கேட்ட மக்கள் முன்பைவிட குழப்பமாக அங்கிருந்து கிளம்பினர்.

அந்த வாரத்தின் கடைசியில் விவசாயின் மகன் புதுக் குதிரையை பழக்குவதற்காக சென்ற போது கால் உடைந்து வீட்டிற்கு வந்தான். ஊர் மக்கள் விவசாயியைப் பார்த்து தங்கள் வருத்தத்தினை தெரிவித்தனர். விவசாயி முன்பை போலவே "இதனை துயரமாக கருதவில்லை" என்று கூறினார். மக்கள் விவசாயிற்கு என்ன ஆயிற்று தனது மகன் கால் உடைந்ததை கூட துயரமாக கருதவில்லை என்று கூறியவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடுத்த நாள் நாட்டின் மன்னர் அந்த ஊரிலிருந்த வாலிபர்களை தனது இராணுவத்தில் சேர்ப்பதற்காக வந்தார். விவசாயின் மகன் கால் உடைந்து இருந்ததால் அவனை இராணுவத்தில் எடுத்துக் கொள்ள வில்லை.

Thursday, March 22, 2012

மனம் கவர்ந்த பாடல்கள்

என்னதான் இப்பவர  பாட்டு கேட்டாலும்..ராஜா இசை என்றாலே சுகம்தான்


மனம் கவர்ந்த பாடல்கள்
சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.
நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!
ராகதேவன் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை இனிமையில் நான் ரசிக்கும் மற்றுமொரு பாடல்


ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!
இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.
அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.
தொடர்ந்து வரும் பல்லவி,
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…
அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்
ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.
இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…
என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, …, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.
பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி
பாடலை எழுதியவர்: வைரமுத்து


சலங்கை ஒலியில் ராஜா இசை மனதை மயக்கும்....ராஜா இசை என்றாலே சுகம்தான் 



இசையுடன்
J.குமார் .

Friday, March 16, 2012

ஈழத்தமிழனின் ஈடுகட்ட முடியாத இழப்பு


ஈழத்தமிழனின் ஈடுகட்ட முடியாத இழப்புக்கு நீதி கேட்டு வெடித்திருக்கும் ட்விட்டர் புரட்சி


ஈழமக்களுக்கு இழைக்கப்பட கொடுமைகள் உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க வேண்டும், அனைவருக்கும் அந்த கொடுமைகள் பற்றி அறியச்செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ட்விட்டரில் புரட்சி கோஷங்கள் எழுப்பப்படது.. என் அளவில் நான் எழுதியவை..

1.ஆங்கிலேயன் இந்தியாவை கொள்ளை அடித்தான், ஒரே ஒரு இத்தாலிப்பெண் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே பலி ஆக்கினாள் #killingfields"

2. தமிழனை காட்டி கொடுக்கத்தயங்காதவன் கருணா,தமிழன் வெட்டி எரியப்பட்டபோதும் வேடிக்கை பார்த்தவர் கலைஞர் #killingfields"

3. திமுக கொடியின் நிறத்துக்கான விளக்கம்- ஈழத்தமிழனின் ரத்தமும்,அவன் எதிர்காலமுமா?-சிவப்பு,கறுப்பு #killingfields

4. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவர் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, எல்லாரையும் ஒரு வருடம் இலங்கையில் தங்கவைத்தால் என்ன?#killingfields"

5. சாப்பாட்டில் கை வைக்கும்போது இலங்கையில் ஓடிய ரத்த ஆறுதான் நினைவு வருகிறது, கை கழுவினால் அவர்கள் கண்ணீர் நினைவு#killingfields

6. தமிழ் நாட்டை பீடித்த ரோகி, தமிழ் இனத்தை ஆண்ட துரோகி, அவர் கலைஞரா? கொலைஞரா.?#Killingfields

7. தமிழ் இனத்தலைவர் என்றழைக்கப்பட்டவர் தமிழ் இனத்தை அழிக்கத்துணை போன தலைவர் என்று வரலாறு அழைக்கட்டும்#Killingfields

8. இந்தியா நான்கு எழுத்து,தமிழன் நான்கு எழுத்து,இலங்கை நான்கு எழுத்து,கலைஞர் நான்கு எழுத்து துரோகம் நான்கு எழுத்து#KillingFields

9. உயிரைக்கொடுத்து இன மானம் காக்க பலர்.. மானத்தைக்கெடுத்து,அடுத்துக்கெடுத்து பதவியைத்தக்கவைக்க சிலர்#Killingfields

10. இந்தியப்பெருங்கடல் நீர் மட்டம் உயர்ந்தால் அது ஈழத்தமிழர்களின் நிலை கண்ட நம் கண்ணீராய் இருக்கும்#Killingfields

11. அரசியல் லாபத்துக்காக ஒரு இனத்தையே பலியிடத்துணிந்த இரு குடும்பங்களும் மன உறுத்தல்களுடனே எஞ்சிவாழ்நாளை கழிக்கட்டும்#Killingfields

12. கடவுள் அரக்கனை கொன்ற நிகழ்வு சூரசம்ஹாரம், ஒரு அரக்கன் பல வீரர்களை சூழ்ச்சி செய்து தின்ற நிகழ்வு வீர சம்ஹாரம்#killingfields

13. இலங்கையில் ராகுலையும், கூடங்குளத்தில் பிரியங்காவையும் நிரந்தரக்குடி வைத்து விட வேண்டும்#KillingFields

14. அகதிகளின் கதி அதோ கதி, அனைத்தும் அரசியல் சதி, தமிழனின் நெற்றியில் பலவந்தமாக எழுதப்பட்ட விதி#KillingFields

------------------------------

15. கையில் இருப்பதை எல்லாம் கொடுத்தான் கர்ணன், கைக்கு அகப்பட்டவர்களை எல்லாம் கொன்றான் கர்ண கொடூரன் ராஜபக்சே#KillingFields

16. தமிழ்நாட்டைவிட்டு கலைஞர் , இந்தியாவை விட்டு சோனியா காந்தி 2 குடும்பமும் தள்ளி வைக்கப்பட்டால் நாடு சுபிட்சம் பெறும்#KillingFields

17. ஒரு ஊர் வாழ ஒரு குடும்பத்தை இழக்கலாம், ஆனால் ஒரு குடும்பம் வாழ ஒரு இனத்தையே அழிக்க வழி செய்தார் கலைஞர்#KillingFields

18. இத்தாலி தன் ஒரு தாலி இழந்ததற்கு ஒரு லட்சம் தாலிகளை பலி கொடுத்தது, பழி தீர்த்தது##KillingFields

19. ஒரு இந்தியன் இத்தாலிக்கு வாழ்வு கொடுத்தான், பல தமிழர்களின் வாழ்வு கெடுத்தான்#KillingFields

----------------------------------
20. காந்தியின் பெயரை தன் பெயருடன் கொண்டிருந்தும் அவர் குணங்கள் எதுவுமே வரப்பெறவில்லை எனில் எதற்கு அந்த பதவி?#KillingFields
-------------------------------
21. இரண்டு தனி நபர்கள் நினைத்திருந்தால் ஒரு இனமே அழிக்கப்படாமல் இருந்திருக்கும்#KillingFields

-----------------------------------

22. நம்மிடம் கொடுப்பதற்கு, காப்பதற்கு மனம் இல்லை, அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை#KillingFields

23. எட்டு மணி நேர மின்வெட்டையே தாங்கிக்கொள்ள முடியாதவன் தமிழகத்தமிழன், 24 மணிநேரமும் மனித வெட்டை சந்திப்பவன் ஈழத்தமிழன்#KILLINGFIELDS

24 இல்பொருள் உவமை அணிக்கு மிகக்கொடூரமான உதாரணம்கருணையே இல்லாத துரோகி கருணா#Killingfields

25. ஈழத்தமிழனின் வீட்டில் அரிசி உலை கொதிப்பதில்லை,எந்த சிங்களனும் அவர்களை மதிப்பதில்லை#KillingFields
---------------------------------
26. அமைதிக்கான நோபல் பரிசை தருவதற்கு முன் அட்டூழியத்துக்கான அகோர தண்டனை ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட வேண்டும்#KillingFields
------------------------

27. இறந்தான் இறந்தான் ஈழத்தமிழன் இறந்தான், மறந்தான் மறந்தான் தமிழகத்தலைவன் தாய் நாட்டை நேசிக்க, காப்பாற்ற மறந்தான்#KillingFields

28. ஈழத்தில் பிறந்து ஈழத்தில் அழிந்த பிரம்மபுத்திரர்கள்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் பிரம்மபுத்ரா நதியே வற்றிவிட்டதாம்#KillingFields
----------------------------------

29. வெண்ணைகள் எல்லாம் அன்னைகள் ஆகின்றனர்,தலை எடுக்க விடாமல் துரத்தப்பட வேண்டியவர்கள் தலைவராக இருக்கிறார்கள்#KillingFields

--------------------------------

30. உயிருடன் ஈழத்தமிழனை எரித்த ராஜபக்சேவுக்கு விருந்து வை, கண்டனம் தெரிவிக்க உருவ பொம்மை எரித்தால் சிறையில் வை #KillingFields

----------------------------------


31. ஈழத்தமிழனுக்காக போராடிய புலிகளை அரசியல் லாபத்துக்காக வஞ்சித்தன தமிழக நரிகள் #killingfields
------------------------------

32. கடல் கடந்து ஈழத்தில் தமிழன் மண்டையைப்போட்டுக்கொண்டிருக்கிறான்.இங்கே நாம் கடலை போட்டுக்கிட்டு இருக்கோம் :( #killingfields
--------------------------------------

33. ! தமிழர்களே! நீங்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன், எனக்கு என் குடும்பம் தான் பெருசு #KillingFields

34. ஈழத்தில் சாதம் வடிக்க வழி இல்லாமல் தமிழன், இங்கே சச்சின் சதம் அடித்தால் என்ன? அடிக்கா விட்டால் என்ன? #killingfields
---------------------------
35. எந்த குடுகுடுப்பைக்காரராலும் நம் நாட்டுக்கு நல்ல காலம் எப்போ பிறக்கும்னு சொல்லவே முடியலை :( #killingfields
------------------------------
36. தமிழக அரசியல் தலைவர்களில் முதல்வராக இருந்தவர்களில் எம் ஜி ஆர் மட்டுமே ஈழத்தமிழனுக்கு ஏதாவது செய்ய நினைத்தவர் #killingfields””

'தெய்வம் நின்று கொல்லும்’ என்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர தமிழனுக்கு வேறு வழி இல்லை!
 

Wednesday, March 14, 2012

மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்.



பாவ மன்னிப்பு என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் இயற்றிய மனிதன் மாறிவிட்டான்.. என்ற பாடல் சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் விருப்பமான பாடலாகும்.

ஒவ்வொரு முறையும் மனிதனின் கண்டுபிடிப்புகளைப் பார்க்கும் போதும்.. எனக்கு நினைவுக்கு வரும் பாடல் இது.

போலச் செய்தல் தான் மனிதனை இந்த அளவுக்கு வளரச் செய்திருக்கிறது.
இதனை கவிஞர் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்..

பறவை - விமானம்
எதிரொலி - வானொலி
மீன் - படகு..

மனிதன் - கணினி!!!!!!!


இப்படி எல்லாமே மனிதனின் ஒப்புநோக்குச் சிந்தனைகள் தான்.



'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்


மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

ம்..ம்..ம்..ம்..
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை


மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

Thursday, March 8, 2012

சங்கரன்கோவிலில் வைகோவின் நெத்தியடி


சங்கரன்கோவிலில் வைகோவின் நெத்தியடி.....

32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டு தேர்தல் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள். தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள், அப்போது எத்தனை அமைச்சர்கள் அங்குபோய் முகாமிட்டு நிவாரன பணியை மேற்கொண்டார்கள்? முதலமைச்சரான ஜெயலலிதாவே பத்து நிமிடம் மட்டுமே செலவு செய்து தானே புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். இப்போது சங்கரன்கோவிலுக்கே தலைமைச்செயலகத்தையே மாற்றியிருக்கிறார்கள்

என்ன செய்வது? தானே புயல் பாதித்த பகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவில்லையே?


மின்வெட்டால் அனைத்து தொழில் கூடங்களும் இழுத்து மூடும் நிலைக்கு வந்துள்ளதே அதை பற்றி சிந்திக்க முதல்வருக்கு நேரமில்லை. மின்சாரம் போதவில்லையா கவலை இல்லை. நான்கு மணிநேர மின்வெட்டை பத்து மணி நேரமா கூட்டுங்க அதுவும் போதவில்லையா இருபத்தி நாலு மணி நேரமா மாத்துங்க நமக்கு என்ன இடை தேர்தல் தானே முக்கியம்.

இடைதேர்தலில் முதல்வரோ அமைச்சர்களோ பிரச்சாரத்துக்கு போவது அரசாங்கம் ஒரு கட்சிக்கு சாதகமாக நடப்பது போன்றது. முதல்வரும் அமைச்சர்களும் நாட்டுக்கு பொதுவானவர்கள். அவர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு போக கூடாது. அப்படி போவதாக இருந்தால் தமது அமைச்சர் பதவிய ராஜினமா செய்து விட்டு கட்சி பிரமுகர் என்ற அடையாளத்துடன் தான் பிரச்சாரத்துக்கு போகவேண்டும் என்று சொன்ன காமராஜர் போன்ற தலைவர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டின் இன்றைய நிலையை பார்த்தீர்களா?

வாழ்க தமிழ்நாடு..வளர்க..இந்தியா