Pages

Wednesday, March 14, 2012

மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்.



பாவ மன்னிப்பு என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் இயற்றிய மனிதன் மாறிவிட்டான்.. என்ற பாடல் சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் விருப்பமான பாடலாகும்.

ஒவ்வொரு முறையும் மனிதனின் கண்டுபிடிப்புகளைப் பார்க்கும் போதும்.. எனக்கு நினைவுக்கு வரும் பாடல் இது.

போலச் செய்தல் தான் மனிதனை இந்த அளவுக்கு வளரச் செய்திருக்கிறது.
இதனை கவிஞர் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்..

பறவை - விமானம்
எதிரொலி - வானொலி
மீன் - படகு..

மனிதன் - கணினி!!!!!!!


இப்படி எல்லாமே மனிதனின் ஒப்புநோக்குச் சிந்தனைகள் தான்.



'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்


மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

ம்..ம்..ம்..ம்..
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை


மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ