கவிஞர் வைரமுத்துவின் தேசிய விருது பெற்ற திரைப்படபாடல்கள் (வீடியோ இணைப்பு).
58வது திரைப்பட தேசிய விருதுகளில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் பாடல் எழுதியதற்காக சிறந்த பாடலாசியர் விருதை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து. இது அவருக்கு 6 வது தேசிய விருதாகும். எனக்கு புடித்த கவிஞர் வைரமுத்து என்ற வகையில் இது எனக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்குறது, இந்த விருதால் கவிஞர் வைரமுத்துவுக்கு பெருமை இல்லை தேசியவிருதுக்குத்தான் பெருமை என்பது என் அசைக்க முடியாத கருத்து. கவிஞர் வைரமுத்து, நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதி தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
கவிஞர் வைரமுத்து, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்ற திரைப்படபாடல்கள் (வீடியோ இணைப்பு).
1. முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
2.ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
3.கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
4.சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
5.கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)
6.தென்மேற்குபருவக்காற்று (கள்ளிக்காட்டில் பெறந்த தாயே..)
பின்குறிப்பு:- அங்காடி தெரு திரைப்படத்துக்கு எந்த விருதுகளும் கிடைக்காததும், ஆடுகளத்துக்கு கிடைத்த விருதுகளும் தேசிய விருதுகள் மேல் ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு போய்விட்டது :(