Pages

Thursday, March 10, 2011

அறுபத்து மூணு பேருக்கு என்ன பண்றது..ஆட்கள் தேவை .


அறுபத்து மூணு பேருக்கு என்ன பண்றது... ?

சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி, அரசியலின் அரிச்சுவடி, இந்தியாவின் விடிவெள்ளி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், தமிழினத்தலைவர், களிங்கர்ஜீ அவர்களின் அனல் பறக்கும் அதிரடி அரசியல் ஆட்டத்தின் விளைவாக, காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெருமையுடன் பெற்று களிங்கர்ஜீ அவர்கள் துணையுடன் மக்களுக்கு தொண்டாற்றி மகிழ்ந்திட துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறது.

தானைத்தலைவர் ராகுல்ஜீ அவர்களின் வழிகாட்டுதலில் சீறு கொண்டு எழுந்துள்ள கட்சியினர், 63 சீட்டுகளை வாங்கிக் குவித்து வெற்றி நடை போடும் இன்னேரத்திலே நமக்குத் தேவையான அந்த 53 (மீதி 10 சீட்டு கோஷ்டித் தலைகளின் வாரிசுகளுக்குன்னு தெரியாதா உங்களுக்கு?)  சிங்கங்களைக் கண்டறியும் பணியில் அனைத்துக் கோஷ்டியினரும் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்!


ரெண்டு நாளா நாங்க அடிச்ச அதிரடில எல்லாரும் இன்னேரம் ஸ்பெக்ட்ரத்த பத்தி மறந்திருப்பாங்கள்ல மேடம்...?


இப்படி சிரிக்கிறீங்களே.... ரெண்டு மூணு நாளா என்ன நடக்குதுன்னு உங்களுக்கு ஏதாவது வெளங்குதா மன்மோகன்ஜீ....?


என்ன சொல்றிங்க தங்கபாலு, 63 பேர்ல 53 பேரு எங்களுக்கு வேண்டப்பட்டவங்களா?



இப்பவாவது நாந்தான் அடுத்த முதல்வர்னு அறிவிச்சிருக்கலாம்...!


பாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன்,  போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!